BIG STORIES
யார் டா இங்க “தல” ? கஞ்சாவால் சீரழியும் இளசுகள்.. தலையை நசுக்கிக் கொலை..! வீட்டை சூறையாடிய பெண்கள்
Aug 13, 2025 01:09 AM
327
காஞ்சிபுரம் அடுத்த சதாவரம் பகுதியில் பொதுக்கழிப்பிட மாடியில் படுத்து உறங்கிய இளைஞரின் தலையில் கல்லைபோட்டு கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவனின் வீட்டை உறவினர்கள் அடித்து உடைத்து சூறையாடினர்...
கொலை வழக்கில் கைதான 17 வயது சிறுவனின் வீட்டிற்குள் புகுந்து கொலையான இளைஞரின் உறவினர்கள் பொருட்களை அடித்து உடைத்து சூறையாடிய கையோடு ஆவேசமாக பேசும் காட்சிகள் தான் இவை..!
தலையில் உள்ள முடியை பாதியாக வெட்டிக் கொண்டும்... கஞ்சா புகைத்துக் கொண்டும், அந்த பகுதியில் தல என தன்னை தானே அழைத்துக் கொண்டு சுற்றி வந்த மாது என்கிற மாதவன் தான் கல்லால் தலையை நசுக்கி கொலை செய்யப்பட்டவர் .
சீரியல் நடிகர் குமாரின் அண்ணன் மகனான மாதவன் தனது வீட்டுக்கு அருகில் உள்ள பொதுக்கழிப்பிடத்தின் மாடியில் நண்பர்களுடன் மது அருந்தி விட்டு அங்கேயே படுத்து உறங்கியதாக கூறப்படுகின்றது.
காலையில் தலை நசுங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாதவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக பலியானார்.
இதையடுத்து அவரது கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 30 பேரை பிடித்து விசாரித்த போலீசார் மாதவன் தலையின் கல்லைபோட்டு கொன்றதாக 2 குழந்தைகளின் தந்தையான 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
15 வயதில் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது இரு குழந்தைகளுக்கு தந்தையான அந்த 17 வயது சிறுவனை , 22 வயதான மாதவன் எடுபிடியாக வேலை ஏவி வந்ததாகவும், அடிக்கடி தலையில் அடித்து வேலை சொல்வதை வாடிக்கையாக வைத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
தனது கூட்டாளிகளுக்கு தலைமையாக இருந்த மாதவன், தினமும் மது, கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி என்று தினமும் கும்மாளமிட்டு வந்ததாக கூறப்படுகின்றது.
அடிக்கடி அந்த 17 வயது சிறுவனை தனது சொல்பேச்சு கேட்காவிட்டால் தலையில் கல்லை போட்டு கொன்று விடுவேன் என்று மிரட்டி வந்துள்ளார்.
இன்ஸ்டா கிராம் மூலம் பெண்கள் விவகாரத்திலும் மாதவன் செயல் எல்லை மீறி போனதாக கூறப்படுகின்றது. சம்பவத்தன்று 17 வயது சிறுவனும் அதிகாலை வரை மது அருந்திய போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது அருகில் கிடந்த கல்லை எடுத்து மாதவனின் தலையில் ஓங்கி பலமுறை அடித்ததோடு , உயிர் பிழைத்து விடக்கூடாது என்று அருகில் கிடந்த சேலையை எடுத்து அவரது கழுத்தை இறுக்கியதாகவும் 17 வயது சிறுவன் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த தகவல் தெரியவந்ததும் மாதவனின் குடும்பத்தில் உள்ள பெண்கள், 17 வயது சிறுவனின் வீட்டை அடித்து சூரையாடினர், டிவியை தூக்கி தெருவில் வீசினர்
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாதவனின் உறவினர்களை சமாதானப்படுத்தினர்.
இதனை ஏற்க மறுத்த உறவினர்கள் இந்த கொலையில் 5 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும், 4 பேரை போலீசார் தப்ப விட்டு விட்டதாகவும் கூறி போர்க்குரல் எழுப்பினர், நடிகர் குமார் கொலையாளி தவறவிட்ட செருப்பை போலீசார் எடுக்கமலேயே சென்று விட்டதாக குற்றஞ்சாட்டினார்
மேலும் இந்த பகுதியில் உள்ள இளைஞர்களிடம் கஞ்சா, போதை மாத்திரை மற்றும் போதை ஊசி நடமாட்டம் அதிகமாக இருப்பதாக புகார் அளித்தும் போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஆவேசமானார்
மாதவனின் சகோதரி ஒருவர் கழிப்பிடத்தின் மேல் ஏறி, தனது சகோதரனை ஒருவர் எப்படி கொலை செய்திருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியதோடு, 25 கிலோ கல்லை எப்படி தனி நபர் மேலே தூக்கி வந்திருக்க முடியும் ? என்றார்
போலீசார் கூறும் போது, ஏற்கனவே மாதவன் தலைவைத்து படுப்பதற்காக வைத்திருந்த கல் அது என்றும் அதனை தூக்கி போட்டு தலையை நசுக்கி இருப்பதாக 17 வயது சிறுவன் கூறியதாக தெரிவித்தனர். கொலைக்கு நியாயம் கிடைக்கும் வரை சடலத்தை அடக்கம் செய்யமாட்டோம் என்று மாதவனின் உறவினர்கள் தொடர்ந்து போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu