BIG STORIES
ஒரு பள்ளி..ஒரு மாணவர்.. ஒரு டீச்சர்... ஒரு H.M.. ரூ.1 லட்சம் சம்பளம்..! நம் ஊரில் தான் அதிசய பள்ளி
Aug 13, 2025 01:20 AM
47
ஒரு பள்ளி..ஒரு மாணவர்.. ஒரு டீச்சர்... ஒரு H.M.. ரூ.1 லட்சம் சம்பளம்..! நம் ஊரில் தான் அதிசய பள்ளி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஒரே ஒரு மாணவருடன் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. அங்கு பணியில் உள்ள ஒரு ஆசிரியரும், தலைமை ஆசிரியரும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் மாதச் சம்பளம் பெற்று வருகின்றனர்
ஒரு மாணவருக்காக ஒரு பள்ளிக்கூடம்...! அந்த பள்ளிக்கூடத்தில் பணியாற்றும் இரு ஆசிரியர்களுக்கும் ஊதியத்தை லட்சத்தில் அள்ளிக் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நெடுஞ்சாலை துறை அலுவலகம் அருகே மேல சாத்தான்குளம் TNDTA டக்ஸ்போர்டு அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் மற்றொரு பெண் ஆசிரியர் ஒரு சமையலர் பணிபுரிந்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஒரு மாணவன் மட்டும் படித்து வருகிறான்.
இந்த நிலையில் செவ்வாய்கிழமை அந்தப் பள்ளியை நேரில் சென்று பார்த்த போது ஒரு மாணவன் மட்டும் முட்டங்கால் போட்டுக் கொண்டு கரும்பழகையில் தன்னந்தனியே எழுதி கொண்டிருந்தான்.
அப்போது அந்த அறையில் ஒரு பெண் ஆசிரியர் மட்டும் உள்ளே அமர்ந்திருந்தார் வீடியோ எடுப்பது பார்த்து நீங்கள் யார் என்று கேட்டுக் கொண்டே, கையில் செல்போனை எடுத்து தலைமை ஆசிரியர் போன் செய்தார்.
அதற்கு முன்பே தலைமை ஆசிரியர் அறையை வீடியோ எடுத்த போது தலைமை ஆசிரியர் அறையில் ஆள் யாரும் இல்லை மின்விசிறி மட்டும் ஓடிக் கொண்டிருந்தது.
அனைத்து அறைகளும் வெறிச்சோடி காணப்பட்டது. 11 மணிக்கு அங்கு வந்த தலைமை ஆசிரியர் ஹெர்பன்சிங் உங்களிடம் யார் புகார் அளித்தார் என்று கேட்டபடியே பேச ஆரம்பித்தார்
“எனக்கும் நிர்வாகத்திற்கும் பிரச்சனை இருந்ததால் என்னை பணியிடம் மாற்றம் செய்தார்கள், இதில் அதிக மாணவர்கள் படித்த பள்ளி தான் என்னை மாற்றியதால் மாணவர்கள் இங்க இருந்து வேறு பள்ளிக்கு மாறி சென்று விட்டார்கள்”, “தற்போது மூன்று மாணவர்கள் உள்ளனர்”. அதில் இருவர் வரவில்லை .ஒருவர் மட்டும் வந்துள்ளார் என்று தலைமை ஆசிரியர் விளக்கம் அளித்தார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக நேரத்துக்கு வராத காரணத்தாலே மாணவர்களுக்கு முறையாக பாடம் கற்பிக்காததால் இதுபோன்ற பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக சுட்டிக்காட்டிய சமூக ஆர்வலர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளையும் ஆய்வு செய்து குறைந்த மாணவர்களுடன் படிக்கும் பள்ளிகளில், கூடுதல் மாணவர்களை சேர்க்க முயற்சி எடுக்க வேண்டும் என்கின்றனர்.
மேலும் ஒன்றிரண்டு மாணவர்கள் தனியாக அமர்ந்து படிப்பதால் மன உளைச்சலும் மனசோர்வும் ஆகக் கூடிய சூழ்நிலை ஏற்படும் என்றும் பணி செய்யாமல் சொகுசாக குறைந்த மாணவர்களை வைத்துக் கொண்டு அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்களை அதிக மாணவர்கள் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு மாற்றினால் அங்கு ஆசிரியர் பற்றாக்குறை நீங்கும் என்று சுட்டிக்காட்டபடுகின்றது.
இது டயோசிசன் ஸ்கூல் என்பதினால் எங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது நடவடிக்கை எடுக்கக் கோரி நோட்டீஸ் மட்டுமே அனுப்ப முடியும் என்று கல்வி அதிகாரி விளக்கம் அளித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu