BIG STORIES
உத்தரவிட்ட ட்ரம்ப்..! ரஷ்யாவின் வசம் இருக்கும் 'பேரழிவு அரக்கன்'.. அதென்ன 'டெட் ஹேண்ட்'?
Aug 13, 2025 04:15 AM
27
உத்தரவிட்ட ட்ரம்ப்..! ரஷ்யாவின் வசம் இருக்கும் 'பேரழிவு அரக்கன்'.. அதென்ன 'டெட் ஹேண்ட்'?
2022-ம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் எவ்வளவு முயற்சி செய்தும் இன்று வரை எந்த முடிவும் எட்டப்படவில்லை.
2-வது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், ரஷ்யா, உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவேன் என தெரிவித்தார். போரை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றும் பலன் அளிக்கவில்லை.
இதனை தொடர்ந்து போரை நிறுத்துமாறு ட்ரம்ப், ரஷ்யாவுக்கு 50 நாள் காலக்கெடு விதித்தார். பின்னர் அதனை 12 நாட்களாக குறைத்தார். இதுகுறித்து ரஷ்ய முன்னாள் அதிபரும் அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வதேவ் தனது எக்ஸ் தளத்தில், “ட்ரம்பின் ஒவ்வொரு காலக்கெடுவும் போரை நோக்கி தள்ளும் நடவடிக்கை’’ என பதிவிட்டார்.
இதனை பார்த்து கடுப்பான ட்ரம்ப், தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில், "டிமிட்ரி மெட்வதேவ் அத்துமீறி பேசி வருகிறார். எனவே, ரஷ்யா அருகே 2 அணுசக்தி நீர்மூழ்கிகளை நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளேன்’’ என குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்காவின் எந்த ஒரு பெரிய நடவடிக்கையும் டெட் ஹேண்ட்' நடவடிக்கையை தூண்ட வழிவகுக்கும் எனவும் அதன் பிறகு தாங்கள் பின்வாங்க மாட்டோம்’’ எனவும் டிமிட்ரி மெட்வதேவ் எச்சரிக்கை விடுத்தார்.
இதனைத்தொடர்ந்து, டெட் ஹெண்ட்டா? அப்படி என்றால் என்ன? பலரும் இணையத்தில் தேட ஆரம்பித்துள்ளனர். டெட் ஹெண்ட் என்பது 1980-களில் உருவாக்கப்பட்ட சோவியத் யூனியன் காலத்து அணு ஆயுத கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு.
எதிரி நாடுகள் அணு குண்டு வீசினால், அதனால் ஏற்படும் நில அதிர்வு, அணுக் கதிர்வீச்சு பற்றிய தகவல் அந்த அமைப்புக்கு கிடைக்கும். அதன் பிறகு தலைமை உத்தரவிட்டதும் குறிப்பிட்ட அந்த நாட்டின் மீது தனது தாக்குதலை நடத்தும்.
பொதுவாக அணு ஆயுத தாக்குதலுக்கு உத்தரவிடும் அதிகாரம் அதிபருக்கு மட்டுமே இருக்கும். இந்த நிலையில், எதிரி நாட்டின் அணுகுண்டு தாக்குதலில் ரஷ்யாவின் அதிபர் உட்பட முக்கிய தலைவர்கள் உயிரிழந்துவிட்டால், அங்கிருந்து உத்தரவு வராத நிலையில் அதை தானாக புரிந்துகொள்ளும்.
அதாவது ஏவுகணை தானாக வெளியில் வந்து ஆங்காங்கே பூமிக்கடியில் புதைத்து வைக்கப்பட்டுள்ள அணுகுண்டுகளுக்கு தகவல் கொடுக்கும்.
பின்னர் அவை தானாக செயல்பட்டு, எந்த நாடு தாக்குதல் நடத்தியதோ அந்த நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தி துவம்சம் செய்துவிடும். இதனாலேயே டெட் ஹேண்ட் அமைப்பு மிகவும் மோசமான அணு ஆயுதமாக கருதப்படுகிறது.
அமெரிக்கா, சோவியத் ரஷ்யா இடையே பனிப்போர் நடைபெற்றபோது, அமெரிக்காவின் தாக்குதலில் தலைநகரமே அழிந்து, அதிபர், ராணுவ தளபதி உள்ளிட்டோர் இறந்துவிட்டாலும் தன்னிச்சையாக இயங்கி பதிலடி கொடுப்பதற்காக சோவியத் ரஷ்யாவால் 'டெட் ஹேண்ட்' உருவாக்கப்பட்டது.
அப்படிப்பட்ட டெட் ஹேண்ட்டை, அமெரிக்காவிற்கு எதிராக கையில் எடுக்க நேரிடும் என ரஷ்யா முன்னாள் அதிபர் தெரிவித்துள்ளது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu