BIG STORIES
மாதம்பட்டி ரங்கராஜ் எடுத்த முடிவு.. மீண்டும் முதல் மனைவியுடன்?... வெளியான புதிய அப்டேட்!
Aug 13, 2025 04:17 AM
37
சமீபத்தில் நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ், தனது ஆடை வடிவடைப்பாளரான ஜாய் கிரிசல்டாவை 2-வது திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்போது தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகியுள்ளது.
கோவைக்கு அருகிலுள்ள மாதம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜ். 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான இவர், அதைத் தொடர்ந்து 'பென்குயின்' படத்திலும் நடித்தார். சினிமாவில் நடித்திருந்தாலும், அவரைப் பிரபலமாக்கியது அவரது சமையல்தான். சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் வீடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் சமையல் செய்து அசத்தியவர் ரங்கராஜ்.
பிரபல சமையல் நிகழ்ச்சியிலும் நடுவராகப் பங்கேற்று வரும் மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கெனவே திருமணமாகி ஸ்ருதி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது முதல் மனைவி ஸ்ருதி, ஒரு வழக்கறிஞர். இந்தச் சூழ்நிலையில், சமீபத்தில், மாதம்பட்டி ரங்கராஜின் காஸ்டியூம் டிசனைரான ஜாய் கிரிசால்டா, மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி என்று கூறி திருமண புகைப்படங்களை வெளியிட்டு பெரும் புயலை கிளப்பினார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வெளியாகிய பரபரப்பை கிளப்பிய நிலையில், அதைத்தொடர்ந்து மேலும் ஒரு பதிவை போட்ட கிரிசில்டா, தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார். இது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியை விவாகரத்து செய்தாரா? அல்லது விவாகரத்து பெறாமலே இரண்டாவது திருமணம் செய்துகொண்டாரா? திருமணத்திற்கு முன்பே குழந்தை எப்படி? என நெட்டிசன்கள் பலரும் கேள்விகளை பறக்கவிட்டனர்.
2வது திருமணம் குறித்து, மாதம்பட்டி ரங்கராஜ் எந்த விளக்கமோ, மறுப்போ இதுவரை அளிக்கவில்லை. பலரும் பல்வேறு விமர்சனங்களை அவர் மீது கடுமையாக வைத்து வந்தனர், இதனால் கடுப்பான மாதம்பட்டி ரங்கராஜ் தனது கமெண்ட் செக் ஷனை ஆஃப் செய்து வைத்தார். மேலும் அவரது மனைவி ஸ்ருதி கூட இந்த விவகாரத்தில் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.
இந்த சூழலில் தான் கிரிசில்டா மீண்டும் தனது இன்ஸ்டா பக்கதில் ஒரு போஸ்ட் பதிவிட்டிருந்தார். அதில் தனது போன் நம்பர் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகவும், அந்த எண்ணிலிருந்து வரும் எந்தவொரு அழைப்பு அல்லது குறுஞ்செய்திக்கும் பதிலளிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். "யாரிடம் எல்லாம் தனது நம்பர் இருக்கிறதோ, அவர்கள் அந்த நம்பரை டெலிட் செய்து விடுங்கள்," என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.
அதுவரை சமூக வலைதள பக்கமே வராமல் ஒதுங்கி இருந்த மாதம்பட்டி ரங்கராஜ், சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது புகைப்படத்துடன் ஒரு கேப்ஷன் பதிவிட்டிருந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில், தற்போது தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் பொது நிகழ்ச்சி ஒன்றில் மாதம்பட்டி ரங்கராஜ் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்று அருகருகே அமர்ந்திருந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவே இல்லை. ஸ்ருதி ஒரு பக்கமும், ரங்கராஜ் ஒரு பக்கமும் திரும்பி அமர்ந்திருக்கின்றனர். இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, திருமணம் தொடர்பாக வைரலான மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது தனது முதல் மனைவியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் வைரலாகி இருக்கிறார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu